மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.. தண்ணீர் திறப்பு பாதிக்குமா?
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது, இதனால் மேட்டூர் அணை நிரம்பும் வேகம் குறைந்துள்ளது.
Recommended Video

தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது, இதனால் மேட்டூர் அணை நிரம்பும் வேகம் குறைந்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடபடுகிறது. விநாடிக்கு 35,000 கனஅடியாக இருந்தது.

ஆனால், தற்போது அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை இப்போது குறைந்துள்ளளது. இதனால் தண்ணீர் திறப்பும் குறைந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இப்போதும் வெள்ளம் வடிந்துள்ளது.
இப்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 24,099 கனஅடியில் இருந்து 10,026 கனஅடியாக உள்ளது. அதேபோல் நீர்மட்டம் 49.78 அடியாகவும், நீர் இருப்பு 17.67 டிஎம்சியாகவும் குறைந்து இருக்கிறது. ஆனால் எப்போதும் போல அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. போக போக நீர் வெளியேற்றப்படும் அளவும் குறைய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications