சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல், ஜனவரி 28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.

குறுவை, சம்பா, தாளடிப் பயிர்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்துக்கான நீர்த் தேவை குறையும். நடப்பாண்டில் ஜூன் 12இல் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
ஆகஸ்ட் 9ல் திறப்பு
சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் 9ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலதா அறிவித்தார். அதன்படி, ஞாயிறன்று அணை திறக்கப்பட உள்ளது.
56வது ஆண்டாக தாமதம்
இதுவரை 55 ஆண்டுகள் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது 56ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தாமதமாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
12 லட்சம் ஏக்கர்
ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த தண்ணீரைக் கொண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம்
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 96.48 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 2,833 கன அடி வீதம் தணணீர் வந்துகொண்டிருந்தது. குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.37 டி.எம்.சி.யாக இருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications