சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல், ஜனவரி 28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.

குறுவை, சம்பா, தாளடிப் பயிர்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்துக்கான நீர்த் தேவை குறையும். நடப்பாண்டில் ஜூன் 12இல் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
ஆகஸ்ட் 9ல் திறப்பு
சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் 9ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலதா அறிவித்தார். அதன்படி, ஞாயிறன்று அணை திறக்கப்பட உள்ளது.
56வது ஆண்டாக தாமதம்
இதுவரை 55 ஆண்டுகள் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது 56ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தாமதமாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
12 லட்சம் ஏக்கர்
ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த தண்ணீரைக் கொண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம்
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 96.48 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 2,833 கன அடி வீதம் தணணீர் வந்துகொண்டிருந்தது. குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.37 டி.எம்.சி.யாக இருந்தது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications