ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான பீரங்கி வண்டி சென்னைக்கு வருகை
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான பீரங்கி வண்டி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான பீரங்கி வண்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் தனி விமானத்தின் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையால் மீண்டு வந்துவிடுவார் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவரது மரணச் செய்தி அனைவரிடத்திலும் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. பிரமதர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர் சென்னை வந்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரை கண்ணில் ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ராஜாஜி ஹால் முன்பு கூடியுள்ளனர்.
இன்று மாலை அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராஜாஜி ஹாலில் இருந்து அவரது உடல் ராணுவ பீரங்கியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடற்கரை மணலில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் செல்வதற்கான பீரங்கி வண்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைத்துள்ளது. பீரங்கி வண்டி வந்த பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications