பெண்களுக்குப் பாதுகாப்பு தேவையென்றால் ஜெ. பிரதமராக வேண்டும்- அமைச்சர் செந்தூர் பாண்டியன்

நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் மாநில மகளிரணி செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் தென்காசியில் நடநதது.
இதில் கலந்து கொண்ட தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசுகையில், காங்கிரசும், பாஜகவும் மாறி மாறி ஆட்சி பொறுப்பில் அமர்ந்திருந்தாலும் இந்தியாவுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக் குறியாக இருந்து வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்பு அனைத்தும் சட்டமாக்கப்பட மத்தியில் பிரதமராக முதல்வர் ஜெயலலிதா வரவேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசு என்ற பெருமை கிடைக்கும் என்றார் அவர்.
கூட்டத்தில் வரும் பிப் 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு உதவிகள் வழங்குதல், சிறப்பு பூஜைகள், பிரார்ததனைகள், தொழுகைகள் செய்திடவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்கிட பாடுபடுவது எனவும் முக்கிய பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர்கள் அக்பர்ஷா, ஷமீம் இப்ராகிம், எப்சி கார்த்திகேயன், விநாயக மூர்த்தி, ஓன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், செல்வராஜ், நகர செயலாளர்கள் தென்காசி முத்துகுமார், அம்பை அறிவழகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications