பேனை பெருமாளாக்குவது தான் எதிர்க்கட்சியின் வேலை... திண்டுக்கல் சீனிவாசனின் பொளேர் - வீடியோ!
எதிர்க்கட்சியினர் சொல்லித் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை அரசு செய்ய வேண்டும் என்று இல்லை என அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன் கூறியுள்ளார்.
சேலம் : கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சி சொல்லித் தான் செய்ய வேண்டும் என்று இல்லை தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்பவர் கடந்த 5-ந்தேதி தோட்டத்திற்கு சென்ற போது அவரை கரடி கடித்து குதறியது. இதில் முகம், கண், கை, கால், உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாதையனை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு ரூ.59 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. பேனை பெருமாளாக்குவது தான் எதிர்க்கட்சயின் வேலை, கல்வி உதவி தொகை தொடர்பாக மு.க.ஸ்டாலின் சொல்லி நாங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை.
தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும் தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி நல்ல முடிவு எடுக்கும். நீட் தேர்வு வேண்டாம் என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். அதற்கான முயற்சியிலும் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications