திவாகரன் பிரித்தாளுகிறார்... தினகரன் சிரிப்பு காட்டுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
பொதுக்குழுவுக்கு எதிராக கருத்து கூற டிடிவி தினகரனுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: கட்சியை கைப்பற்றலாம் என நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்றும் பொதுக்குழுவுக்கு எதிரான தினகரன் கருத்து நகைப்புக்குரியது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
செப்டம்பர் 12ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்த அறிவிப்பும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியானது. இந்த கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனை நீக்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

தினகரன் அறிக்கை
இதனிடையே இன்று டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் செப்டம்பர் 12ஆம் தேதி கூட உள்ள கூட்டம் சட்ட விரோதமானது என்று கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு முரனானது என்று கூறியுள்ள தினகரன் நிர்வாகிகள் யாரும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நடவடிக்கை பாயும்
விதிகளை மீறி பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும், பொதுக்குழு கூட்ட அறிவிப்பை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமார் கண்டனம்
தினகரன் அறிக்கை பற்றி கருத்து கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழு கூட்டம் பற்றி கருத்து கூற தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கட்சியை கைப்பற்றலாம் என்று நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.

பிரித்தாளும் சூழ்ச்சி
திவாகரன் பேட்டிகள் பிரித்தாளும் சூழ்ச்சிதான். வெள்ளைக்காரர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள்.
அதிமுகவில் ஜாதி, மத பிரிவு கிடையாது. ஜாதி துவேஷத்தை திவாகரன் கையில் எடுக்கிறார் என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications