ஜெயலலிதாவை குறை கூற ராமதாஸுக்கு தகுதி இல்லை... அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதாவை குறை கூற ராமதாஸுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவை குறை கூறுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மீன் வள துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசு திவாலாகிவிட்டது. திவாலான அரசுக்கு எதற்கு முதல்வர். எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

மேலும் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றும் ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சசிகலா, தினகரன் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்.
ஜெயலலிதாவால் பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. ஜெயலலிதாவை குறைசொவ்லதற்கு ராமதாஸுக்கு எள்ளளவும் தகுதி இல்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக யாருக்கும் எப்போதும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. ராமதாஸ் கூறுவது போல் தமிழக அரசு திவாலாகவில்லை. மிகவும் சிறப்பாகவே செயல்படுகிறது என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications