ஐஐடியில் சமஸ்கிருத இறைவணக்கப்பாடல்: அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததற்கு ஐ.ஐ.டி அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கப்பாடல் பாடப்பட்டதற்கு சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் இசைக்கப்பட்டது. பொதுவாக மத்திய அரசு நிறுவன விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு.
ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐ.ஐ.டி.,யில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் , தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததற்கு சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ஐ.ஐ.டி விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை இந்த அரசு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.
எனினும், பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு இனி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் என்றும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இனியும் இது போன்ற சம்பவம் நடைபெறாது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஐ.ஐ.டி உடனடியாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதை உடனடியாக கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications