இமயமலையை எதிர்த்து நிற்கும் சிறு கற்களுக்கு வெற்றி கிடைக்காது... ஜெயக்குமாரின் தேர்தல் பொன்மொழி!
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிக மிகப் பிரகாசமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக் குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம பேசிய ஜெயக்குமார் கூறியதாவது : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு செய்யும். அதிமுகவினரின் பிரச்சாரம் எப்போது தொடங்குகிறத என்பதற்கான அட்டவணையை தலைமைக் கழகம் அறிவிக்கும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக மிக பிரகாசமாக உள்ளது. ஜெயலலிதா வழியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். அதிமுகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளரை நிறுத்தப்போவதாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், இமயமலையை எதிர்த்து நிற்கும் சிறு கற்களுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications