கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை.. விளாசிய ஜெயக்குமார்
காவிரி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் போலியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மத்திய அரசின் எடுபிடிகளை போல தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் கூறி கமல் கடுமையாக சாடினார். இந்நிலையில் கமலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியல்வாதியாக ஏற்க முடியாது
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமலை நடிகராக ஏற்கலாம் அரசியல்வாதியாக ஏற்க முடியாது என்றார். கமலிடம் நடிகருக்கான பண்பு மட்டுமே உள்ளது என்றும் அரசியல்வாதிக்கான பண்பில்லை என்றும் ஜெயக்குமார் சாடினார்.

போராட்டம் நடத்த துப்பில்லை
காவிரி பிரச்சனை பற்றி கமலுக்கு என்ன தெரியும் ? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் விளாசினார்.

ரயிலில் சென்றது சாதனையா?
சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் சென்றது சாதனையா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். கமலுக்கு பதில் சொல்ல தனக்கு நேரம் இல்லை என்றும் காவிரியில் நமது உரிமையை பெறுவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.

பக்குவம் கிடையாது
டிவிட்டரில் அரசியல் செய்து, எழுதி வைத்து படிக்கும் சிறந்த நடிகர் கமல் என்றும் அரசியல்வாதி என ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கமல்ஹாசனுக்கு பக்குவம் கிடையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

துரோகம் செய்த திமுக
ஸ்டாலினும், கமலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார். காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்தது திமுக தான் என்றும அவர் சாடினார்.

குடும்ப சொத்து
ஸ்டாலின் நடத்தும் கபட நாடகம் மக்களுக்கு தெரியும் என்றும் அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான ஏராளமான டிவி சேனல்கள், எப்எம்கள், மற்றும் வணிக மால்களை காவிரிக்காக மூட வேண்டியது தானே என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications