அமைச்சர்கள் பணத்தை சுருட்ட நினைப்பதாக கூறுவதா? தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

அமைச்சர்கள் பணத்தை சுருட்ட நினைப்பதாகத் தினகரன் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணத்தைச் சுருட்ட அமைச்சர்கள் நினைப்பதாகத் தினகரன் கூறியதற்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நிதானம் மற்றும் பக்குவம் இன்றி தினகரன் பேசி வருகிறார் என்று கூறினார். மேலும், அமைச்சர்கள் பணத்தை சுருட்ட நினைப்பதாகத் தினகரன் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

Minister Jayakumar slams TTV Dinakaran

ஜெயலலிதா ஆட்சியின் பலனை அனுபவித்தவர் டிடிவி தினகரன் என்று குற்றம்சாட்டிய அமைச்சர், தற்போது, தினகரன் குடும்பம் தலையிடாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார். 2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் எப்படி அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகிக்க முடியும் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

எம்ஜிஆரின் வாரிசுகள் நாங்கள் தான். அவருக்கு நாங்கள் மட்டுமே விழா எடுக்கத் தகுதியானவர்கள் என்ற அமைச்சர், ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்ப வில்லை என்றார். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+