ஓ.பிஎஸ் அணியை வாங்க பேசலாம்னு கூப்பிடுறோம் ஆனா வரமாட்றாங்களே! - ஜெயகுமார் சாடல்
ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடையே ஒற்றுமை இல்லை என்று நிதியமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தை தெரிவித்து வருவதாக அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ள்ளார்.
அதிமுகவின் இபிஎஸ் அணி மற்றும் ஓ.பிஎஸ் அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு நல்ல சூழல் உருவாகி வருவதாக இரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செம்மலை தொண்டர்களிடம் கருத்து கேட்டதின் அடிப்படையில் இபிஎஸ் அணியுடன் இணைய வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அமைச்சர் ஜெயகுமார், செம்மலை கருத்து குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பொன்னையன், இது வரை கட்சியை ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும் விரைவில் சுமூக பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் கூறினார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் முரண்பாடான கருத்தகளை தெரிவித்து வருவதாக கூறினார். ஓ.பிஎஸ் அணியை நாங்கள் பேச்சுவார்த்தை வாங்க பேசலாம் என்று அழைப்பு விடுத்துவிட்டோம், ஆனால் அவர்கள் தரப்பில் செம்மலை, பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்டோர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக ஜெயகுமார் கூறினார்.
நிபந்தனைகள் பற்றி பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறியிருந்தாலும் பேச்சவார்த்தையை இழுப்பதோடு, ஓ.பிஎஸ் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனி கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications