அமைச்சர் காமராஜ் மீதா 420 போட்டீங்க.. நன்னிலத்திலிருந்து தேனிக்கு தூக்கி அடிக்கப்பட்ட டிஎஸ்பி!
தமிழக அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனி மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனிக்கு தூகியடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ரூ30 லட்சம் மோசடி செய்தார் அமைச்சர் காமராஜ் என்பது வழக்கு. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மெத்தனம்
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் தமிழக போலீசார் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

கடும் கண்டனம்
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் சிபிஐக்கு மாற்றுவேன் என எச்சரித்தார். இதையடுத்து நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம், அமைச்சர் காமராஜ் மீது இபிகோ 420 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்.

தூக்கியடிப்பு
உச்சநீதிமன்றத்தில் இதை தமிழக அரசு பிரமாணப் பத்திரமாகவும் தாக்கல் செய்தது. இந்த நிலையில் நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனி மாவட்டத்துக்கு சமூக நீதி மனித உரிமை டிஎஸ்பியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

என்னவாகும் வழக்கு?
மன்னார்குடி டிஎஸ்பி பணியிடம் ஒரு மாத காலமாக காலியாக இருந்து வருகிறது. அதனால் நன்னிலம் டிஎஸ்பி விசாரித்து வந்தார். தற்போது நன்னிலம் டிஎஸ்பியும் தூக்கியடிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications