பஞ்சாயத்த முடிச்சாச்சி.. எச்.ராஜாவை கைது செய்ய தேவையில்லை.. அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி
பஞ்சாயத்த முடிச்சாச்சி.. எச்.ராஜாவை கைது செய்ய தேவையில்லை.. அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி
சென்னை: எச்.ராஜாவை கைது செய்ய தேவையில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் மற்றும் காவல்துறை குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியவர் ராஜா.
இவ்வாறு ஜனநாயகத்தின் முக்கியமான இரு தூண்கள் குறித்து தரக்குறைவாக பேசி அவற்றின் மாண்பை ராஜா குலைத்துவிட்ட நிலையிலும், அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய, மாஃபா பாண்டியராஜன் மேலும் கூறியதை பாருங்கள்:

சோபியா செய்தது தவறு
விமானத்தில் வைத்து கத்தி கோஷம் போட்டது மிகப்பெரிய தவறு. எனவேதான் சோபியா கைது செய்யப்பட்டார். ஆனால், அதை ஒப்பிடும்போது, எச்.ராஜா பேச்சோ, முன்பு எஸ்.வி.சேகர் கூறிய கருத்தோ, சட்டம் ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமானது கிடையாது.

ராஜா ஃப்ரீ
எனவே எச்.ராஜாவை கைது செய்யும் நிலை ஏற்படவில்லை. இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். இதன் மூலம், காவல்துறை வழக்குப் பதிவு செய்தும்கூட எச்.ராஜாவை கைது செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. எனவே எச்.ராஜா இனி ஃப்ரீ பேர்ட்தான் என்பது உறுதி.

நேற்று அப்படி
ஆனால் ஆவடியில் நேற்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், எச். ராஜா மீது போடப்பட்ட வழக்குக்கு ஏற்றார்போல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

நாங்கல்லாம் பயப்பட மாட்டோம்
அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியிலும், எச்.ராஜாவை கைது செய்வோம் என கூறவில்லை. அவர் அளித்த பேட்டியில், "அதிமுக பயப்படவில்லை. எதை பார்த்தும் பயப்படும் இயக்கம் கிடையாது. அது ஊடகங்கள் கற்பனை. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதை அரசு எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்" இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications