ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது வரவேற்கத்தக்க மாற்றம்: மாஃபா பாண்டியராஜன்
ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில பங்கேற்பது வரவேற்க தக்க மாற்றம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில பங்கேற்பது வரவேற்கதக்க மாற்றம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்துக்கான தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்தது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 23ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம்
இதைத்தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் வரவேற்பு
இந்நிலையில் தமிழக அரசின் அதிமுக கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பார் என தகவல் வெளியானது. இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஈகோ மறந்து
ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில பங்கேற்பது வரவேற்கதக்க மாற்றம் என தெரிவித்தார். மேலும் ஸ்டாலினின் இந்த மாற்றம் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

தனக்கு தெரியாது
கமல், ரஜினிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு உள்ளதா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications