மழை வெள்ள மீட்பு, சேத ஆய்வு.. வேட்டியை மடித்துக் கொண்டு களம் இறங்கிய அமைச்சர், மேயர்!
சென்னை: சென்னையில் விடாமல் பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கும் பணியில் அமைச்சர்கள் இறங்கியுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது சென்னையில். நகரின் எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் ஜாமீன் விவகாரம் தொடர்பாக எந்த அமைச்சரையும் சென்னையில் காண முடியவில்லை.
இன்றுதான் அமைச்சர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். கூடவே சென்னை மாநகராட்சி மேயரும் களம் குதித்துள்ளார்.

சோழிங்கநல்லூர் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் டி.கே.எம் சின்னையா, தொகுதி எம்.எல்.ஏ. கே.பி. கந்தன், மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் இன்று நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். விரைவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர் ஆகியோர் பார்வையிட்டு மக்களுக்கு விமோச்சனம் கிடைக்க வழி செய்தால் நலமாக இருக்கும்.
முதல் மழையிலேயே சென்னை நாஸ்தியாகி விட்டது. மழை நீர் வடிகால்களை மழைக்கு முன்பே சுத்தம் செய்யாததால் வந்த வினை இது. வழக்கமாக வருடா வருடம் இதே போல புலம்பிக்கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இப்படியேதான் இருக்கிறது நிலை.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications