ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது.. அமைச்சர் எம்சி.சம்பத் உறுதி

தமிழகத்தில் ஹட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு உறுதியாக அனுமதிக்காது என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஹட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு உறுதியாக அனுமதிக்காது என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இப்பிரச்சனை குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

Minister MC.Sampath says that Tamil Nadu government will not allow Hydrocarbon project

தீர்மானத்தின் மீது பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக மத்திய அரசு உறுதியான தகவலை தரவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்தப் பிரச்சனையில் அரசின் நிலையை விளக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்சி.சம்பத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது என்றார்.

இதனால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்தார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி தரப்படவில்லை என்றும் அமைச்சர் எம்சி.சம்பத் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+