சுட்டெரித்த கோடை வெயில்! சாலையோரம் நுங்கு சாப்பிட்டு இளைப்பாறிய அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்!
திருப்பூர்: சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக சாலையோரக் கடையில் நுங்கு சாப்பிட்டு Chill செய்திருக்கிறார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலுக்கு மத்தியில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குவதில் நுங்கு முதன்மை இடத்தில் உள்ளது.

வைட்டமின் பி, சி, மற்றும் கால்சியம், சோடியம், உள்ளிட்ட சத்துக்களும் நுங்கில் அதிகளவு உள்ளன. இதனால் தான் நுங்குக்கு எப்போதுமே கிராக்கி இருந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்துகொண்ட செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சாலையோரம் நுங்கு விற்கப்படுவதை பார்த்தவுடன் காரை நிறுத்தச் சொல்லி இறங்கியிருக்கிறார்.
அடிக்கிற வெயிலுக்கு இளைப்பாறும் விதமாக நுங்கு சாப்பிட்ட அமைச்சர் சாமிநாதன், தன்னுடன் சென்ற கட்சிக்காரர்களையும் நுங்கு சாப்பிட வைத்தார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், நுங்கை தனியாக சீவி எடுக்கமல் நுங்கிற்குள் உள்ள தண்ணீரை மட்டும் அமைச்சர் சாமிநாதன் அருந்தியது தான். அதில் தான் உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது.

தற்போது நுங்கு சீசன் என்பதால் எங்கு பார்த்தாலும் குறிப்பாக நெடுஞ்சாலைப் பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு மாதம் போனால், சீசன் முடிந்து நுங்கை பார்ப்பதே அபூர்வமாகிவிடும் என்பதால் சீசன் முடியும் முன்பே அதனை அதிகளவில் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications