அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் பதிலை பாருங்க
ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என்று அமித்ஷாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
Recommended Video

மதுரை: ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என்று அமித்ஷாவின் விமர்சனத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற பாஜக மாநாட்டுக்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம்தான் என்று பேசினார்..

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அமித்ஷா இந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம் என்று கூறியதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊழல் செய்தவர்கள் யார்? ஊழலில் திளைத்தவர்கள் யார்? என்று மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார். மேலும், வைகை அணை விரைவில் தூர் வாரப்படும் என்று கூறினார்.
அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமாரும் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார் எச்.ராஜா மொழி பெயர்ப்பில் மாற்றி சொல்லியிருப்பார் என நகைச்சுவையாக கூறி கடந்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications