சிறந்த மதிப்பெண் பெற்றவர்களின் விளம்பர பேனர் வைக்க கூடாது: செங்கோட்டையன் எச்சரிக்கை
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தனியார் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் விளம்பர பேனர்கள் வைக்கப்படக்கூடாது என்றும் மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும் 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள 87.7சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆகவே வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது:

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், நாளை முதல் மே 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு தேவைப்படுவோர் விடைத்தாள் நகல் பெற்றபின்புதான் மறுமதிப்பீடுக்கும் மறுகூட்டலுக்கும் விண்ணக்க வேண்டும்.
அதுவரை விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
நடந்து முடிந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்கள், மற்றும் இந்த தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25-ம் தேதி சிறப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.
தனியார் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் விளம்பர பேனர்கள் வைக்கப்படக்கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியாகிஉள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மனம் தள வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications