சிறந்த மதிப்பெண் பெற்றவர்களின் விளம்பர பேனர் வைக்க கூடாது: செங்கோட்டையன் எச்சரிக்கை
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தனியார் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் விளம்பர பேனர்கள் வைக்கப்படக்கூடாது என்றும் மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும் 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள 87.7சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆகவே வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது:

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், நாளை முதல் மே 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு தேவைப்படுவோர் விடைத்தாள் நகல் பெற்றபின்புதான் மறுமதிப்பீடுக்கும் மறுகூட்டலுக்கும் விண்ணக்க வேண்டும்.
அதுவரை விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
நடந்து முடிந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்கள், மற்றும் இந்த தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25-ம் தேதி சிறப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.
தனியார் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் விளம்பர பேனர்கள் வைக்கப்படக்கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியாகிஉள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மனம் தள வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
செங்கோட்டையன் உறவினருக்கு எல்லாம் சீட் இல்லை.. கடுகடுத்த எடப்பாடி.. அப்செட்டில் அதிமுக எம்எல்ஏ -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications