விபத்தில் சிக்கிப் பிழைத்த அமைச்சர் வைத்திலிங்கம்.. ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்!

ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் வாழப்பாடியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் இருந்து காரில் வாழப்பாடி புறப்பட்டு சென்றார்.
கார் தம்மம்பட்டி அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அமைச்சர் வைத்திலிங்கம், உள்பட அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர்களின் பாதுகாப்பு போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்டு வேறொரு காரில் அனுப்பி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் வைத்திலிங்கம வாழப்பாடி சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் அதிகாலை தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு வந்தார். அமைச்சர் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும் இன்று காலை தொண்டர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
அவர்களை அமைதிப்படுத்திய அமைச்சர், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நீங்கள் அனைவரும் அமைதியாக வீட்டிற்குச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications