"அம்மா" மீண்டும் முதல்வராக வேண்டும்.. யாகம் நடத்திய வளர்மதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலையாக வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி அதிமுகவினர் தொடர் பிரார்த்தனைகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த யாகம் ஒன்றில் அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி சிறப்பு யகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. பகுதி செயலாளர் நுங்கை மாறன் தலைமையில் இது நடைபெற்றது. இதில் வளர்மதி கலந்து கொண்டு யாகத்தில் பங்கேற்றார்.
மேலும், அவருடன் கவுன்சிலர்கள் சிவராஜ், அறுமுகம் (எ) சின்னையா, புஷ்பனகர் அறுமுகம், சந்திபஷ்கர், ஆயிரம் விளக்கு செயலாளர் மணோகரன், கேபிள் டி.வி மாறி மற்றும் அதிமுகவினரும் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் யாகத்தில் பங்கேற்றனர்.