வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: அமைச்சர் வளர்மதி தகவல்
சென்னை: சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள் சுரங்கப்பாதைகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, வேலுமணி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் வளர்மதி கூறுகையில், பெரும்பாலான இடங்களில் முழுமையாக வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 41 முகம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகள், சுரங்கபாதைகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கூடுதலாக வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2,500 ஒப்பந்த பணியாளர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி பகுதியில் படகில் சென்று மருத்துவ உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, சென்னையில் வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்த 14 பேரில் 11 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 225 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் வேலுமணி கூறுகையில், கடந்த 1918 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. தற்போது பெய்த கனமழையால் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் ஏதும் சேதமடையவில்லை என வேலுமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications