டெங்கு காய்ச்சல் மரணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் பாதியில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் பாதியிலேயே எழுந்து சென்றார்.
சென்னை: டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் நாமக்கல்லில் டெங்கு காய்ச்சலால் 8 சிறார்கள் உயிரிழந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெங்குவை தடுக்கும் விதமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

அப்போது வீடு வீடாக நில வேம்பு கசாயத்தை வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில், நாமக்கல்லில் குழந்தைக்கு டெங்கு இருந்ததால் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கேட்கிறீர்கள்.
டெங்கு விழிப்புணர்வு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் இந்த தடுப்பு முறைகள் அனைவரையும் போய் சேரும் என்று மழுப்பலாகவே பதிலளித்தார். டெங்குவுக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் ஏன் பழைய கேள்விகளையே கேட்கிறீர்கள் என்று கூறினார்.
மேலும் புதிய கேள்விகளை கேட்குமாறு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து காலம் தாழ்ந்த நடவடிக்கையால்தான் நாமக்கல்லில் டெங்குவால் 8 சிறார்கள் உயிரிழந்தனர் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், காலம் தாழ்ந்த நடவடிக்கை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்.
கடந்த 3 மாதமாக என்னுடன் இருந்து பார்த்துவரும் நிலையில் காலம் தாழ்ந்த நடவடிக்கை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டு அவர் உரிய பதில் அளிக்காமல் எழுந்து சென்றுவிட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications