அடுக்கடுக்காய் குவியும் புகார்கள்- அடுத்தடுத்து சிக்கலில் அதிமுக மாஜி அமைச்சர்கள்!
சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர்களான செந்தில்பாலாஜி மற்றும் டி.கே.சின்னையா ஆகியோர் மீது பரபரப்பு புகார்கள் பதிவாகியுள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பேர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் மெக்கானிக் வேலை வாங்கித்தருவதாக தங்களிடம் ரூபாய் 1.5 கோடி வரை பணம் வசூலித்ததாகவும், ஆனால் வேலை வாங்கித்தராமல், பணத்தையும் திருப்பித்தராமல்செந்தில்பாலாஜி, கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் ஏமாற்றிவிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். புகார் மனுவில் பணம் கொடுத்து ஏமாந்த சுமார் 48 பேரின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது.
இதுபோல முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் ஆகிய இருவர் மீதும், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நடிகரும், அ.தி.மு.க பிரமுகருமான சரவணன் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், 15 சவரன் தங்க நகை மற்றும் பல லட்சம் பண மோசடி செய்துவிட்டு டி.கே.எம்.சின்னையாவும், வெங்கட்ராமனும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே பல தடவை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தன்னிடம் மோசடி செய்த பணத்தில் ஒரு பகுதியான ரூபாய் 5 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டனர் என்றும் மனுவில் கூறி இருந்தார். அந்த ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பணத்தையும் அவர் நிருபர்களிடம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications