கோவில்பட்டியில் தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி
கோவில்பட்டி: வீட்டில் தனியாக இருந்த சிறுமியை குடிபோதையில் இருந்த தாயின் கள்ளக்காதலன் பலத்காரம் செய்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய். இவரது மகள் லட்சுமி (12) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இசக்கிதாய் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிழைப்புக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தீக்குச்சி கம்பெனிக்கு இசக்கிதாய் வேலைக்கு சென்றார்.

அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிவகாசியை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவருடன் இசக்கிதாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது. இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கி தாய் தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் மீண்டும் கோவில்பட்டியில் உள்ள பாரதியார்நகருக்கு குடிபெயர்ந்தார்.
இசக்கிதாயின் மகள் லட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண்டன் கோவில்பட்டியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
குடிப்பழக்கம் உடைய மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இசக்கிதாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். மாலை வழக்கம் போல மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த இசக்கிதாய் அவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
பள்ளி மாணவியான லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் போதை தலைக்கேறிய மணிகண்டன் தனது கள்ளக்காதலியின் மகள் லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கோவில்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications