அப்பா முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை சிறுமியை சீரழித்த 25 பேர்... வேலியே பயிரை மேய்ந்த கதை!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே 13 வயதான ஒரு சிறுமியை தாத்தா, அப்பா, அண்ணன் என மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெற்ற மகள் என்றும் பாராமல் குடிபோதையில் பலமுறை சீரழித்த தந்தையே, தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். தங்கையின் வயதையும் உடல்நிலையையும் பற்றிக் கவலைப்படாமல் சகோதரனும் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ளான்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தந்தை, சகோதரர், கண்டக்டர், சப்.இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் கைதான நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகள், மருத்துவர், வழக்கறிஞர்களுக்கு தொடர்பு உள்ளதா? என காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் கூடுதல் எஸ்பி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கேரளா மாநிலம் சூரிய நெல்லி சம்பவத்தைப் போல அதிர்ச்சிகரமான சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே பலாத்காரம் செய்ததோடு, நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துப்போய் இன்ஸ்பெக்டர், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விருந்தாக்கியுள்ளான் சப் இன்ஸ்பெக்டர் சங்கர். காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஊத்தி மூடப்பார்த்தது போலீஸ். ஆனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக இன்றைக்கு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சூரியநெல்லி பலாத்கார வழக்கு

சூரியநெல்லி பலாத்கார வழக்கு

1996ஆம் ஆண்டு சூரியநெல்லியைச் சேர்ந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு 40 நாட்கள் வைத்து பல்வேறு இடங்களில் பல நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 35 பேரில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே 5 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதம் 30 பேரில், 23 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் சீரழித்த கொடூரம்

பல ஆண்டுகள் சீரழித்த கொடூரம்

அதைப்போன்ற ஒரு கொடூரம் தற்போது சிவகங்கையில் நடந்துள்ளது. தன்னைப் பெற்ற அப்பா முதல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை பலராலும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்,13 வயதான சிறுமி ஒருவர். சிவகங்கையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (47). சி.ஆர்.பி.எப். போலீசாக பணியாற்றி, டிஸ்மிஸ் ஆனவர். இவரது மகன் கார்த்திக், 20. மகள் ரேவதி, 17,. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் சென்ற ரேவதி, தனது அத்தை செல்வியிடம், தன்னை பல ஆண்டுகளாக தந்தை மற்றும் அண்ணன், பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்டக்டர், அண்ணனின் நண்பர்கள் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் அத்தை செல்வி புகார் செய்தார். இதனடிப்படையில் சுகந்தியின் தந்தையும், அண்ணனும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர்.

சீரழித்த தாத்தா

சீரழித்த தாத்தா

சிறுமியிடம் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலமும் பெறப்பட்டது அப்போது அவர் அளித்த ரகசிய வாக்குமூலம் திடுக்கிடச் செய்தது. பாட்டி வீட்டில் வளர்ந்த சிறுமிக்கு 10 வயதுக்கு முன்னரே தாத்தா மூலம் பாலியல் தொந்தரவு இருந்துள்ளது. பின்னர் சிறுமியை தந்தை அழைத்துச் சென்று தன்னுடன் வளர்த்துள்ளார். அப்போது தினசரி மது அருந்தி, பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள் ளார். மது அருந்திய பின் போதையில் மகளிடமே அத்துமீறி நடந்துள்ளார். தொடர்ந்து மிரட்டி, வலுக்கட்டாயமாக மதுவை சிறுமிக்கு ஊற்றியுள்ளார். என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில், சிறுமியான மகளுடன் அத்துமீறலை தொடர்ந்துள்ளார்.

போதை பழக்கத்தில்

போதை பழக்கத்தில்

தந்தையுடன் சகோதரரும் மதுப் பழக்கத்துக்கு ஆளானார். பின்னர் தந்தை பாணியிலேயே போதையில் சகோதரியிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். ஓய்வூதியமும் கிடைக்காத நிலையில், மதுவுக்காக நண்பர்கள், உறவினர்கள் பலரை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். நாளடைவில் என்ன நடக்கிறது என்பதையே அறியாத வகையில், போதைப்பழக்கத்துக்கு மகளை ஆளாக்கி அடிமையைப்போல் தந்தை நடத்தி வந்துள்ளார்.

டாக்டர், வக்கீல், போலீஸ்

டாக்டர், வக்கீல், போலீஸ்

கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனை சென்ற போது டாக்டர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், ஆதரவு தருவதாக கூறிய வக்கீலும் தன்னை சீரழித்து விட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து புகார் செய்ய போலீஸ் நிலையம் சென்றபோது ஆரம்பத்தில் சப்.இன்ஸ்பெக்டர் பின்னர் இன்ஸ்பெக்டர் அவரைத் தொடர்ந்து ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோரும் தன்னை சீரழித்து விட்டதாக கூறினார்.

இருவர் மட்டுமே கைது

இருவர் மட்டுமே கைது

சிறுமி பலாத்கார வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாக இருக்கவே, ரேவதியை வக்கீல், டாக்டர், ஐபிஎஸ் அதிகாரிகளும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்றை வழக்கறிஞர் வின்சென்ட் தாக்கல் செய்தார். அதில் `ரேவதியை கடந்த 3ஆண்டுகளாக தொடர்ந்து பலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போலீஸ் எஸ்.ஐ முதல் ஏ.டி.ஜி.பி. வரை உயரதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு உள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி, சி.பி.ஐ, சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

8 பேர் கைது

8 பேர் கைது

அதைத்தொடர்ந்து எஸ்.ஐ ஷங்கர், தனியார் பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார், அரவிந்த், செந்தில் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஆய்வாளர் சிவக்குமாரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதில் சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் ரேவதியின் உறவினர்கள். அரவிந்த், என்பவன் ரேவதியின் அண்ணனின் நண்பர்.

கண்டக்டர் கைது

கண்டக்டர் கைது

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவஹர்புரத்தைச் சேர்ந்த நமச்சிவாயம்,55 என்பவரை, நேற்று சிவகங்கை மகளிர் போலீசார் கைது செய்தனர்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், சிவகங்கையில் ரேவதியின் வீட்டருகே வசித்து வந்தார். அப்போது அவர், ரேவதியை பலமுறை பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே நேற்றிரவு ரேவதியின் தாத்தா உறவு முறையான முத்துராக்கு,48 கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ் உயரதிகாரிகள் வரை பலர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐபிஎஸ் அதிகாரிகள்

ஐபிஎஸ் அதிகாரிகள்

சிறுமி பலாத்காரம் செய்த எஸ்.ஐ., சங்கர், மதுரையில் ஐ.ஜி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சிவகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் பல முறை சிறுமி பலாத்காரம் செய்தார். பின்னர் அப்போது ஐஜியாக இருந்தவருக்கு அறிமுகம் செய்துள்ளார். அந்த ஐஜியும் பல முறை சிறுமியை சீரழித்துள்ளார்.

மாமா வேலை பார்த்த இன்ஸ்பெக்டர்

மாமா வேலை பார்த்த இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டருக்கு முழு நேர வேலையே ஐஜிக்கு பெண்களை அறிமுகம் செய்து வைப்பதுதானாம். அப்படித்தான் சிறுமியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த ஐஜி மதுரையில் பணியாற்றும் வரை தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார். இப்போது அவர் ஏடிஜிபியாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், பயந்துபோன சிவகங்கை போலீஸ் அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றனராம்.

சிறுமியிடம் விசாரணை

சிறுமியிடம் விசாரணை

இதனிடையே சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவர் குறித்தும் முழுமையாக அறிய சிறுமியிடம் விசாரிக்க கூடுதல் எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான போலீஸார் காப்பகம் சென்றுள்ளார். சிறுமியின் மனநிலையை பொறுத்து 3 நாட்கள் வரை விசாரணை நடைபெறலாம். வழக்கறிஞர், சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் உண்மையா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

வழக்கறிஞர் காயம்

வழக்கறிஞர் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை நடத்திவரும் வின் சென்ட்டை சென்னை உயர் நீதி மன்றம் அருகே மர்ம நபர்கள் நேற்று தாக்கியதாக செய்தி பரவி யது. இதை மறுத்த அவர் ஆட்டோ மோதியதால் கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

சிக்க வைக்க முயற்சி

சிக்க வைக்க முயற்சி

காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் சென்றபோது சிறுமியை எஸ்ஐ சங்கர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி அளித்த வாக்குமூலத்தில் போலீஸ்காரர்கள் ராஜாராம், சிவக்குமார், சங்கர் மற்றும் 2 பேர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், உயரதிகாரிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர். வழக்கை திசை திருப்ப சிலர் செய்யும் சூழ்ச்சியா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பலரும் சிக்குவார்கள்

பலரும் சிக்குவார்கள்

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தற்போது எஸ்.ஐ. மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் முதல் ஏடிஜிபி வரை கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சூரிய நெல்லி சிறுமிக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி கிடைத்தது. சிவகங்கை சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+