நாளை மிஸ் கூவாகம் போட்டி.. களை கட்டும் கூத்தாண்டவர் கோவில் விழா!
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நாளை மிஸ் கூவாகம் போட்டி நடைபெறுகிறது.
விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 21-ந் தேதி தொடங்கிய இந்தத் திருவிழாவில் நாளை மறுநாள் (5-ந் தேதி) தாலி கட்டும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மகாபாரதத்தில் அரவாண் களப்பலி கொடுக்கப்படுவார். பலி கொடுப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள விரும்புவார். ஆனால் எந்த பெண்ணும் அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டார்கள். இதனால் கிருஷ்ணர் பெண் வேடம் அணிந்து அரவாணை திருமணம் செய்து கொள்வார்.
இதை நினைவு கூறும் வகையில் திருநங்கைகள் இந்த விழாவில் கலந்து கொண்டு அரவாணுக்கு மனைவியாக பாவித்து தாலி கட்டிக்கொள்வது வழக்கம். இதற்காக நாடு முழுவதில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கூவாகம் திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.

கூவாகம் திருவிழா காரணமாக நேற்றே திருநங்கைகள் விழுப்புரம் வந்து குவியத்தொடங்கி உள்ளனர். அங்குள்ள விடுதிகளிலும், தற்காலிகமாக எடுக்கப்பட்ட வாடகை வீடுகளிலும் மற்றும் புதுவையிலும் அவர்கள் தங்கியுள்ளனர்.
இன்று மாலை திருநங்கைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. முதன்முறையாக தேசிய அளவில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நாளை காலை விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். பல்வேறு விதமான நாகரீக உடை அணிந்து போட்டியில் அணிவகுத்து வருவார்கள். அவர்களில் சிறந்த 3 அழகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நாளை மறுதினம் அனைவரும் கூவாகம் கோவிலுக்கு செல்வார்கள். அங்கு தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பின்னர், 6-ந் தேதி காலை அரவாண் தேரோட்டம் மற்றும் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும். களப்பலி முடிந்ததும் திருநங்கைகள் வெள்ளை சேலை அணிந்து விதவை கோலம் பூண்டு, அழுது புலம்புவார்கள்.
அத்துடன், அவர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். 8-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறும். அத்துடன் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நிறைவு பெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications