வங்கக்கடலில் 14 மர்ம பொருட்கள் கண்டுபிடிப்பு... மாயமான ஏ.என்.32 விமானத்தின் பாகங்களா? என ஆய்வு
சென்னை: 29 பேருடன் காணாமல் போன இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏஎன் 32 ரக விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வங்கக்கடலில் சந்தேகிக்கப்படும்படியான 14 பொருட்கள் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல்துறை துணைத்தலைவர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22-ம் தேதி காலை 8.30மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட இந்திய விமானப்படையின் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாயமானது. அதில் இருந்த 29 வீரர்களின் நிலை என்ன என்பது புதிராக இருந்து வருகிறது.

கடலில் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் இதுவைரை காணமல் போன விமானம் குறித்து எந்தவித உறுதியான தகவல்களும் இன்னும் கிடைக்கவில்லை. தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான 'சாகர்நிதி' கப்பல், மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான 'சமுத்திர ரத்னாகர்' ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், 'நிருபக்' என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என மொத்தம் 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. சென்னையில் இருந்து கடலுக்குள் சுமார் 270 கிமீ தொலைவில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் சந்தேகிக்கப்படும்படியான 14 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாக இந்திய புவியியல்துறை துணைத்தலைவர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 'சமுத்திர ரத்னாகர்' ஆய்வுக் கப்பல் வங்கக்கடலில் சந்தேகப்படும் படியான 14 பொருட்களை கண்டுபிடித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட 14 பொருட்களும் காணமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்களா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் 'சமுத்திர ரத்னாகர்' கப்பலுக்கு 14,400 சதுர கி.மீ கடற்பரப்பு ஒதுக்கப்பட்டது. இதில் தற்போது 4,894 சதுர கி.மீ கடற்பரப்பில் தேடும் பணி நிறைவடைந்துள்ளது. மல்டிபீம் எக்கோ, கிரானி மீட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளைக் கொண்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications