வங்கக்கடலில் 14 மர்ம பொருட்கள் கண்டுபிடிப்பு... மாயமான ஏ.என்.32 விமானத்தின் பாகங்களா? என ஆய்வு
சென்னை: 29 பேருடன் காணாமல் போன இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏஎன் 32 ரக விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வங்கக்கடலில் சந்தேகிக்கப்படும்படியான 14 பொருட்கள் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல்துறை துணைத்தலைவர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22-ம் தேதி காலை 8.30மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட இந்திய விமானப்படையின் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாயமானது. அதில் இருந்த 29 வீரர்களின் நிலை என்ன என்பது புதிராக இருந்து வருகிறது.

கடலில் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் இதுவைரை காணமல் போன விமானம் குறித்து எந்தவித உறுதியான தகவல்களும் இன்னும் கிடைக்கவில்லை. தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான 'சாகர்நிதி' கப்பல், மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான 'சமுத்திர ரத்னாகர்' ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், 'நிருபக்' என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என மொத்தம் 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. சென்னையில் இருந்து கடலுக்குள் சுமார் 270 கிமீ தொலைவில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் சந்தேகிக்கப்படும்படியான 14 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாக இந்திய புவியியல்துறை துணைத்தலைவர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 'சமுத்திர ரத்னாகர்' ஆய்வுக் கப்பல் வங்கக்கடலில் சந்தேகப்படும் படியான 14 பொருட்களை கண்டுபிடித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட 14 பொருட்களும் காணமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்களா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் 'சமுத்திர ரத்னாகர்' கப்பலுக்கு 14,400 சதுர கி.மீ கடற்பரப்பு ஒதுக்கப்பட்டது. இதில் தற்போது 4,894 சதுர கி.மீ கடற்பரப்பில் தேடும் பணி நிறைவடைந்துள்ளது. மல்டிபீம் எக்கோ, கிரானி மீட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளைக் கொண்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications