ஸ்ரீரங்கத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்க அ.தி.மு.க. திட்டம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்க ஆளும் அண்ணா தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் உச்சகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் ஆளும் அண்ணா தி.மு.க.வினர் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபடுவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் திருச்சி அருகே சோமரசம்பேட்டையில் தி.மு.க.வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்த பிரசாரத்தின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்படது. இதனால்தான் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்க அண்ணா தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. ஆனால் இதிலும் ரூ2 ஆயிரம் மட்டுமே கொடுத்து ஊழல் புரிகின்றனர் அண்ணா தி.மு.க.வினர். 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அச்சாரமாக ஸ்ரீரங்கம் தேர்தல் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் முறைகேடுகள் மூலம் வெற்றி பெற அண்ணா தி.மு.க. முயற்சிகளை மேற்கொள்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications