மோடி எதை விரும்புகிறாரோ அதைத்தான் மக்களும் சாப்பிட வேண்டுமா?.... ஸ்டாலின் காட்டம்
மோடி எதை விரும்புகிறாரோ அதைத்தான் நாட்டு மக்களும் சாப்பிட வேண்டுமா? என்று மு.க. ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி எதை விரும்புகிறாரோ அதைத்தான் நாட்டு மக்களும் சாப்பிட வேண்டுமா என்று மு.க. ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
எருது, பசு, காளை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக கொல்லக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை ஆங்காங்கே மாட்டுக் கறி உணவுத் திருவிழா நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

7 கட்சிகளின் கூட்டறிக்கை
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் (திமுக), திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), முத்தரசன் (இ.கம்யூ), தொல் திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), கே.எம். காதர்மொகிதீன் (இந்தியன் முஸ்லீம் லீக்) மற்றும் எம்.எச். ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் கூட்டாக அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளனர். அதில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இன்று ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதிகாரம் கிடையாது
அப்போது அவர் கூறுகையில், மாட்டிறைச்சியை தடை செய்ய மத்திய அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. மத்திய அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை மக்களுக்கான எந்த திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தவில்லை. மோடி அரசில் மாநில முதல்வர்கள் நகராட்சி தலைவர் போலும், மாநில அரசுகள் நகராட்சிகள் போலும் செயல்படுகின்றனர்.

விவசாயிகள் பாதிப்பு
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்தன. இந்நிலையில் அவர்களை மேலும் துன்புத்தும் விதமாக மாட்டிறைச்சிக்கான தடையை மத்திய அரசு விதித்துள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications