"விலகுகிறேன்".. பரபரப்பேற்படுத்திய ஸ்டாலின்.. தலைவர்கள் கோரிக்கையால் முடிவு வாபஸ்!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக திமுக வட்டாரம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை.

இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் அளித்ததாகவும், ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள கருணாநிதி மறுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. ஆனால், இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இதற்கிடையே சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, இத்தேர்தலில் திமுக தோல்விக்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என கோரியிருந்த நிலையில் ஸ்டாலின் விலகல் குறித்த வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கூட்டியது. இதனால், மீண்டும் கட்சிக்குள் அழகிரி அழைக்கப்படுவாரா என்ற கருத்தும் நிலவியது.

இதனால் ஸ்டாலின் வீட்டு வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் ஸ்டாலினின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதாக கட்சி துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
என்ன பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்?
திமுக இளைஞர் அணி ஸ்டாலின் வசம்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கட்சியின் பொருளாளராகவும் அவர் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார். இந்த இரு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாகத்தான் தனது கடிதத்தில் கூறியிருந்தாராம் ஸ்டாலின்.
இந்தத் தேர்தலில் ஸ்டாலின் பொறுப்பு என்று பார்த்தால் கூட்டணி குறித்த திட்டமிடல், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், பிரசாரம் என அனைத்திலுமே ஸ்டாலின்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவரின் அறிவுறுத்தலையும், கட்சித் தொண்டர்களின் கோரிக்கையையும் தொடர்ந்து ராஜினாமா முடிவை கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப் போவதில்லை என ஸ்டாலின் தீர்மானித்துள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications