தமிழகத்திற்கு குடியரசு தலைவர் நடவடிக்கை தேவை.. ஸ்டாலின் திடீர் கோரிக்கை
சென்னை: அதிமுக அரசு இனியும் நீடிக்க கூடாது என்றும், இதில், குடியரசு தலைவர் தலையிட வேண்டும் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட்டரில் அவர் கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சிகளை அடக்கி, சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தை முழுவதுமாக முடக்கி வரும் அரசியல் சட்ட விரோத அ.தி.மு.க அரசு இனியும் நீடிப்பது நல்லதல்ல. முற்றிலும் சீரழிந்துவிட்ட அரசு நிர்வாகத்தை மீட்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை அடக்கி,
— M.K.Stalin (@mkstalin) October 2, 2018
சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தை முழுவதுமாக முடக்கி வரும் அரசியல் சட்ட விரோத அ.தி.மு.க அரசு இனியும் நீடிப்பது நல்லதல்ல.
முற்றிலும் சீரழிந்துவிட்ட அரசு நிர்வாகத்தை மீட்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
குடியரசு தலைவரை தலையிட தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications