காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சிறை நிரப்பும் போராட்டம், டெல்லியிலும் போராட்டம்- ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.
இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.
காவிரி கண்காணிப்புக் குழு அமைப்பது என்பது ஒரு நாடகம். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.
சிறை நிரப்பும் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என்றார் ஸ்டாலின். மார்ச் 29-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.