போன் போட்டு குடும்பத்தை திட்டுகிறார்கள்.. புலம்பும் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன்!
ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள் என்று போன் போட்டு மிரட்டுகிறார்கள் என்று கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன் புகார் தெரிவித்துள்ளார்.
கோவை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு பஞ்சாயத்தெல்லாம் முடிந்துவிட்ட பின்னர், ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள் என்று போன் போட்டு மிரட்டுவதாக கோவை தெற்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன் புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து எம்எல்ஏக்கள் 10 நாட்களுக்கு பிறகு தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன் செய்தியாளர்களிடம் தான் மிரட்டப்படுவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

கூவத்தூரில் நான் 10 நாட்கள் இருந்தாலும் தொகுதி மக்களுடன் தொடர்பில் இருந்தேன். மக்களுக்கு தேவையான அனைத்துப் பணிகளை செய்தேன். நேற்று சட்டமன்றத்திற்கு சென்று வாக்களித்தேன். அந்த நேரத்திலும் என் பணிகளை நான் செய்திருக்கிறேன். இப்போது தொகுதிக்கு வந்து விட்டோம். அவர்களை சந்தித்து தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்.
பல நேரங்களில் எனக்கு மர்ம போன்கள் வருகின்றன. எடுத்து பேசினால், ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள் என்று மிரட்டுகிறார்கள். அசிங்கமாக என் குடும்பத்தை இழுத்து திட்டுகிறார்கள். என் குடும்பத்தை ஏன் இழுக்க வேண்டும். திரும்ப அதே எண்ணுக்கு போன் செய்தால் சுட்ச் ஆப் என்று வருகிறது. தொடர்ந்து இதே போன்ற போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நாங்கள் எப்படி ஓபிஎஸ்ஸை ஆதரிக்க முடியும். பன்னீர்செல்வத்தை ஆதரித்தால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நிலைத்திருக்காது. இதுகுறித்து புகார் அளிக்க உள்ளேன் என்று அம்மன் அர்ஜீனன் கூறியுள்ளார்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications