For Daily Alerts
Just In
ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்னன்னு இருக்க முடியாது : கருணாஸ் - வீடியோ
ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்னன்னு இருக்க முடியாது தமிழகத்திற்கு நிரந்தர முதல்வர் வேண்டும் என்று திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவால் கிடைத்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் பூர்த்தியானால்தான் அவரின் ஆன்மா சாந்தியடையும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார். நிரந்தர, நிலையான முதல்வர் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அம்மா ஜெயலலிதாவின் உழைப்பால் அதிமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிர்மறையான செயல்கள் தற்போது அரங்கேறி வருவதை, அவருடைய ஆன்மா ஏற்றுக்கொள்ளாது.
பிரிந்துள்ள இரண்டு அணிகளும் இணைந்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும், மக்கள் நலப்பணிகளையும் தொடர வேண்டும்
என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
Comments
English summary
Unity is strength said Thiruvadanai MLA Karunas, he requests two factions to merge the party.
Story first published: Saturday, May 6, 2017, 15:45 [IST]