தினகரன் தரப்பு விறுவிறு வாதம்.. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை 3-ஆவது நீதிபதி தொடங்குகிறார்.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை 3-ஆவது நீதிபதி சத்யநாராயணா நடத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளையும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. முதலில் டிடிவி தினகரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் தீர்ப்பு
இந்த வழக்கில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் தீர்ப்பை வழங்கினர். இதில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியிடம் சென்றது.

உச்சநீதிமன்றம்
3-ஆவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து 17 எம்எல்ஏக்களும் (தங்கதமிழ்ச்செல்வன் தவிர்த்து) உச்சநீதிமன்றத்தை அணுகினர். உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தக்கு மாற்றக் கோரியும் மூன்றாவது நீதிபதியை மாற்றக் கோரியும் வழக்கு தொடர்ந்தர். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணாவை நியமனம் செய்தது.

ஜூலை 4-இல் விசாரணை
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சத்யநாராயணா இன்று விசாரணையை தொடங்கினார். முதலில் டிடிவி தினகரன் தரப்பு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சத்யநாராயணா இன்று விசாரணையை நடத்தினார். இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் இன்று வாதம் நடைபெற்றது. சபாநாயகர் முடிவு ஒருதலைப்பட்சமானது என வாதம் நடந்தது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications