காற்றழுத்தம் புயலாக மாறும்.. மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மைய இயக்குனர் பேட்டி!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை: வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழத்தில், வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.
வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார். தமிழக மழை நிலவரம் குறித்த விவரங்களை அவர் வெளியிட்டார்.
[அவசரமாக கொடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ரெட் அலெர்ட்.. என்ன காரணம்.. உள்நோக்கம் இருக்கிறதா? ]
அதில், தமிழகத்தில் அதிகமாக புதுக்கோட்டை மீமிசலில் 13 செமீ மழை பெய்துள்ளது. தற்போது வங்கடலில் நிலவும் காற்றழுத்தம் புயலாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும்.
இந்த மண்டலம் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும். இந்த புயல் ஓமன் கரையை நோக்கி நகரும். இந்த சமயத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும். இன்றில் இருந்து 12ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடல் அடுத்த சில நாட்களுக்கு கொந்தளிப்பாக காணப்பட வாய்ப்புள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.