For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாலையில் இருந்து பெய்து வரும் சாரல் மழை.. நீலகிரி, கோவை மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் இன்று அதிகாலையில் இருந்து கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளுத்து வாங்கிய கனமழை... குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி...

    சென்னை: தமிழகத்தில் இன்று அதிகாலையில் இருந்து கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. ஆனால் கனமழையாக பெய்யாமல், தமிழகத்தில் ஆங்காங்கே தினமும் லேசான மழை பெய்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

     Moderate rain poured in many parts of Tamilnadu including Kovai

    முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலையில் இருந்து கொங்கு மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

    கோவையில் காலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை தற்போதும் விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரியில் உதகமண்டலம், குந்தா, கூடலூர், பந்தலூர் வட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அதேபோல் இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Weather Report: Moderate rain poured in many parts of Tamilnadu including Kovai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X