நெசவாளர் தினமெல்லாம் ச்சும்மா பேச்சு.. ஜெயலலிதாவை பார்க்கத்தான் மோடி வந்தார்: ப.சிதம்பரம்
சென்னை: ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நெசவாளர் தினத்தை நரேந்திரமோடி ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சென்னை வந்தார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். இதற்காக நேற்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திரமோடியை தமிழக கவர்னர் கே.ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சீனியர் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதன்பிறகு, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர், தேசிய கைத்தறி தினத்தை அறிவித்தார். நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அங்கு நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு 45 நிமிடம் அங்கு இருந்த மோடி, டெல்லி கிளம்பி சென்றார். முன்னதாக, தமிழக நலன்சார்ந்த நிலுவை கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் ஜெயலலிதா கொடுத்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம், "ஜெயலலிதாவை சந்திக்கும் நோக்கத்துடன்தான் மோடி சென்னை வந்தார். கைத்தறி நிகழ்ச்சி அதற்கு ஒரு சாக்கு மட்டுமே. மோடி ஒரு ஜோதிடக்காரராக மாறிவிட்டார். எப்போதும், நல்லகாலம் பிறக்கப்போகுது என்பதை மட்டுமே அவர் சொல்லி வருகிறார்" என்று சிதம்பரம் தெரிவித்தார்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications