பெண்கள் பாதுகாப்பு குறித்து எங்களிடம் கற்றுகொள்ளுங்கள்.. மோடிக்கு புதுச்சேரி முதல்வர் சவால்!
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மோடி அரசு புதுச்சேரி அரசிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

புதுச்சேரி: பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மோடி அரசு புதுச்சேரி அரசிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாங்கனி திருவிழாவை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு தருவது பற்றி மோடி அரசு புதுச்சேரி அரசிடம் கற்று கொள்ள வேண்டும்.
ஆளுநர் ஆய்வு செய்யும் நோய் புதுச்சேரியில் இருந்து தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது. புதுச்சேரியில் முதல்வர் அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்த கூடாது
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. 22 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். என்.ஆர்.காங். ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications