For Daily Alerts
Just In
பிரதமர் மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
63 வயதாகும் பிரதமர் மோடி நேற்று காலை 8.30 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். இ.சி.ஜி, எகோகார்டியோகிராம் உட்பட பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 6 மணிநேரம் வரை அங்கு மோடி இருந்தார். மோடி மருத்துவ பரிசோதனை முடிந்து திரும்பும் வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மோடி வருகையையொட்டி மெட்ரோ ஸ்டேஷனின் முன்பக்க கட்டிடங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மோடிக்கு இதுபோன்று 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மோடியின் வருகை மருத்துவமனையின் அன்றாட அலுவல்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்
Comments
English summary
The PM’s special security and the Delhi Police’s security wing cordoned off a major section of India's premier government hospital at 5am. Modi, 63, arrived for his check-up at 8.30am.Security personnel swarmed AIIMS and Ansari Nagar and shut down all shops including chemists. The hospital looked abandoned but the chemist store inside was open.
Story first published: Tuesday, August 26, 2014, 10:45 [IST]