துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திட்டமிடல், சட்டசபை, தேர்தல், பாஸ்போர்ட் துறை ஆகியவற்றை ஓபிஎஸ் கவனிப்பார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஜெயக்குமார் வசம் இருந்த சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல், பாஸ்போர்ட் துறைகள் ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையைக் கவனிப்பார் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நேற்று நடைபெற்றது.

 More departments given to Deputy CM OPS

அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார். தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் அப்போது கூறினார்.

ஆவடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டு, மீண்டும் அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளார். ஆனால் மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதே போல முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும் ஓபிஎஸ் அணியில் அமைச்சர் பதவி வழங்கப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+