இறந்து போன தாய் யானை.. முட்டி முட்டி எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை...!
கோவை: கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து யானைகள் இறந்து வருவது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் நரசிபுரம் வனப்பகுதியில் ஒரு பெண் யானை உடல் நலக்குறைுவால் இறந்துள்ளது. அந்த யானையின் குட்டி அதற்கு அருகிலேயே சோகத்துடன் சுற்றி வருகிறது. முட்டி முட்டி தனது தாயை எழுப்ப முயன்ற காட்சி பார்த்தவர்களை உருக வைத்தது.
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து பல யானைகள் இறந்து வருகின்றன. இதுவரை நான்கு யானைகள் இறந்துள்ள நிலையில் நேற்று நரசிபுரம் வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்துள்ளது. ஓடை அருகே இந்த யானை விழுந்து கிடந்தது. உடல் நலக்குறைவால் இது இறந்திருப்பதாக தெரிகிறது. இதன் வயது 25 என்று கருதப்படுகிறது.

இதற்கு அருகிலேயே 2 வயது குட்டி யானை நின்று கொண்டுள்ளது. தனது தாயை முட்டி முட்டியும், துதிக்கையால் எழுப்பவும் அது முயன்று வருகிறது. அந்த யானை அருகில் இருப்பதால் இறந்த யானையை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications