புதுவையில் அதிரடி.. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்.. ஏன் தெரியுமா?
புதுவை: புதுவையில் வரும் கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பப் பட உள்ளது. இதனால், புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லை. இதனால், புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழ்நாடு பாடத் திட்டம் பின்பற்றப்படுகிறது. அதேபோல், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு மாற்றாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த புதுவை அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. அதன்படி, கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட் டம் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது.
இப்படி 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கோரி, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அனுமதி கிடைத்த நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பப் பட உள்ளது. இதனால், புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications