குடிகார சீனிவாசன்.. டெய்லி சண்டை.. நடத்தையில் சந்தேகம் வேறு.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி!
Recommended Video

சென்னை: சென்னை அண்ணாநகரில் குடும்பத் தகராறில் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த மாநகராட்சி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு நியூ காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அம்மு (25). இவர்களுக்கு மோகனகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.

சீனிவாசனுக்கு மது பழக்கம் உள்ளது. இதனால் மூச்சு முட்ட குடித்துவிட்டு தினமும் அம்முவுடன் சண்டையிடுவது வழக்கம். இவருக்கு அம்முவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறியும் அவரை துன்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் போதையில் வந்த சீனிவாசன், தனது மனைவி அம்முவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அம்முவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார்.
இதையடுத்து மனைவியை கொலை செய்தது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு சீனிவாசன் தப்பிவிட்டார். துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் டி.பி.சத்திரம் போலீஸார் அம்முவின் உடலை கைப்பற்றினர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சீனிவாசனை நேற்று கைது செய்தனர். கணவனே மனைவியை கொலை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications