நெல்லையில் குடிநீர் கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் 25 நாட்களுக்கு ஓருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர் நகராட்சியில் சுமார் 10,00,00 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருப்பாநதி குடிநீர் திட்டத்தின் கீழ் 35,00,000 லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் 35,00,000 லட்சம் லிட்டர் தண்ணீரும் ஓரு நாள் விட்டு ஓருநாள் விநியோகம் செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த திமுக ஆட்சியில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு பல கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதை கிடப்பில் போட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடைய நகரின் முக்கிய இடங்களில் 2650 குடிநீர் இணைப்புகளில் குடிநீர் வழங்குவதற்கான வெள்ளோட்ட நடவடிக்கையை குடிநீர் வடிகால் வாரியம் எடுத்தது. இதற்கான பணிகளை செய்ய வந்த சில துணை ஓப்பந்ததாரர்கள் சட்டவிரோதமாக 600 வீடுகளில் தலா ரூ.9,000 வசூலித்து இணைப்பு வழங்கியதாகவும், இந்த இணைப்புகள் வழக்கமான வரும் தண்ணீர் குழாய்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் நகராட்சியில் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினருடன் இணைந்து நேற்று மாலையில் திடீரென காலி குடங்களுடன் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நகராட்சி அலுவலக்ததில் திரண்ட பொதுமக்கள் காலி மண்பானைகளை ரோட்டில் போட்டு உடைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications