ஓ.பி.எஸ் பங்கேற்ற கோவை கூட்டத்தில் கே.பி.முனுசாமி-கண்ணப்பன் நடுவே மோதலா?
கோயம்புத்தூர்: கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் கண்ணப்பன் நடுவே நடுவே கடும் வாக்குவாதம் நடைபெற்றதை போன்ற படம் வைரலாகியுள்ளது.
கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது. திரளான தொண்டர்கள் அதில் பங்கேற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கோவை கொங்கு மண்டலம் எப்போதுமே, அதிமுக எஃகு கோட்டையாக விளங்கி வருவதாக புகழாரம் சூட்டினார்.
நமது அணி பலவீனமாகிவிட்டது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் மூலமாக உருவாக்க முயன்றனர். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் நம் பக்கம் உள்ளனர் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆனால், இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கே.பி.முனுசாமி மற்றும் கண்ணப்பன் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டதை போலவும், ஒரு படம் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது. இதுகுறித்து பன்னீர்செல்வம் தரப்பிடம் கேட்டபோது, அதில் உண்மையில்லை என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications