முரசொலி மாறன் 82வது பிறந்த நாள்... கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 82வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் மனசாட்சி என்று புகழப்பட்டவர் முரசொலி மாறன். மத்திய அமைச்சராக இருந்த அவர் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். கருணாநிதியின் நிழல் போல திகழ்ந்தவர்.
மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு முரசொலி அலுவலகத்தில் அவரது திருவுருச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது#DMK #Kalaignar #Karunanidhi #murasolimaran
Posted by Kalaignar Karunanidhi on Monday, August 17, 2015
அவருக்கு இன்று 82வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அன்பழகன், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தயாதிநிதி மாறன் உள்ளிட்டோரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கும் திமுகவினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications