யுவராஜுக்கு ஜாமீன்.. நெல்லையில் தங்கி கையெழுத்துப் போட ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: தலித் இளைஞர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான யுவராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர், தீரன் சின்னமலை பேரவை என்ற ஜாதி அமைப்பின் தலைவர் யுவராஜ். இவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் என்பவரை கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குப் பின்னர் பல மாதங்கள் தலைமறைவாக இருந்து வந்தார் யுவராஜ். அதேசமயம், அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை ரொம்பவே கேலிக்கூத்தாக்கினார்.

இந்த நிலையில் தான் சரணடையப் போவதாக திடீரென அவர் அறிவித்தார். சொன்னபடி காவல் நிலையத்தில் வந்து சரணும் அடைந்தார். ஆனால் ஆயிரக்கணக்கானோர் புடை சூழ அவர் சரணடைய வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அவர் வாட்ஸ் ஆப் மூலம் செய்தி அனுப்பியது பலரையும் அதிர்ச்சியுற வைத்தது. இந்த நிலையில் இந்த யுவராஜுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜாமீனில் வந்து விட்டனர். இதைச் சுட்டிக் காட்டியும், 100 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை சுட்டிக் காட்டியும் யுவராஜ் சார்பில் ஜாமீன் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி நெல்லையில் தங்கி அங்கு தினமும் காலை, மாலை காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications